Thursday, May 14, 2015

விருதும் தேர்வும் – சில விளக்கங்கள்



மதிப்பீடுகள் தான் நம்பிக்கையை உருவாக்குக்கின்றன
நம்பிக்கைகள் பொய்க்கும்போது  ஊழல்கள் மலிந்து அறம் பாழ்பட்டு  சமூகம் தாழ்நிலை எய்துகிறது

ஆகவே காலத்தின் சரியான மதிப்பீடுகள் சமூகத்தின் வேருக்கு             நீரூற்று

சரியான ஆளுமைக்கு கிடைக்கும் சரியான வெளிச்சம் தொடர்ந்து    மேன்மையான சமூகத்தை உருவாக்குகிறது.

அப்படியான காரியங்களூள் ஒன்றாக நாங்கள் துவக்கியுள்ளதே பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

நம் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரளவுக்காவது  சமூக முன்னேற்றத்தில் பெயர் இருக்க்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் 60 70 ஆண்டுகளுக்கு முன் அது பெரியார் மேற்கொண்ட கடுமையான பாதை

தன்னலமற்ற அவரது தொண்டு காரணமாக தமிழக மக்கள் ப;ல நன்மைகளை பெற்றிருந்தாலும் அவரது காரியத்தை தொடர்நது செய்ய குறிப்பாக இளைஞர்கள் ,, நம் தலைமுறையினர் முன்னெடுத்து வராத காரணத்தால் சமீபமாக தமிழ்ச்சூழல் மீண்டும் புதர் மண்டிப்போய் இருளடைந்து காணத் துவங்கிவிட்டது.

மட்டுமல்லாமல் பெரியார் யார் என்றே  தெரியாமல் சிலர் அவர் புகைப்படங்களை சிறுமை படுத்தும் அற்ப  காரியங்களீல் ஈடுபடலாயினர்

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதும் மீண்டும் மனப்பிறழ்வுக்கு ஆளாகி அடிமைகளாவதும் யூதர்களுக்கு மட்டுமல் தமிழர்களுக்கும் பொருந்தும் என சொல்வது போன்ற நிலையில் தமிழ்ச்சமூகம் கருத்துருவாக்கங்களூம் சித்தாந்தங்களும் இல்லாமல் ஒரு மொன்னையான சமூகமாக மாறிவருகிறது

இந்நிலையிலிருந்து மாற்றி இன்றைய இளைஞர்களுக்கு பெரியார் உருவாக்கிய கருத்தாங்களீன் பால் ஈர்ப்புகொண்டு புதிய சூழலையும் அதற்குத்தக்கன் மாற்றங்களையும் உருவாக்க நண்பர் பெரியார் சாக்ரடீசு பெரிதும் மன வியத்தம் கொண்டிருந்தார்.

விடுதலைக் குழுமத்தில் பெரியார் பிஞ்சு என்ற குழந்தைகள் பத்ரிக்கையில் அவர் மிகுந்த ஈடுபாட்டி காட்டி பலரிடமும் அதை கொண்டு செல்ல முயற்சித்தன் காரணமும் இதுவே

ஆகவே அவரது நினைவு நாளை கொண்டாடலாம் என திட்டமிட்ட போது அவரது எண்ணங்களை தொடரச்செய்யும் வகையில் இப்படியான விருது ஒன்றை உருவாக்கி அதன் மூலம அந்த பாதையில் ஈடுபடுவர்களுக்கு தன்னம்பிக்கையும் வெளிச்சமும் உருவாக்கி தரும் நோக்கத்துடன்  துவக்கப்பட்டதே இந்த பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது.

சரி யார் யார் இந்த விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கலாம் என எங்கள் குழு   கலந்தாலோசித்த போது பலரை சென்றடையும் ஊடகத்துறை நண்பர்கள் பலர் பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் இருந்து வருவதை அறிந்திருந்த காரணத்தால் அவர்களீல் யாருக்காவது கொடுக்கலாம் என முடிவுசெய்தோம் அது போல ஊட்கம் சாராத பலர் சமூக மேன்மைக்காக் தனி நபராகவும் இயக்கமாகவும் களப்பணீ செய்து போராடி வருகின்ற்னர். அவர்களையும் இதனுள் சேர்க்கும் விதமாக பண்பாட்டுத்துறை எனற சொல்லையும் சேர்த்து ஊடகம் மற்றும் பண்பாட்டுத்துறை என இறுதி செய்து கொண்டோம்

இதற்கான ஆய்ப்பணியில் தீவிரமாக இறங்கிய போது நாமறியாத யாரேனும் ஒருவர் தன்னலமற்ற தொண்டு செய்ப்வராக இருந்தால் அவருக்கான வாய்ப்புகளை முன் வைக்கும் பொருட்டு இணையத்திலும் பரிந்துரைக்க கடந்த 4ம் தேதி முதல் அறிவிப்பு செய்திருந்தோம்
ஆனால் எதிர் பார்த்ததைவிட மிக குறைவான  பரிந்துரைகளே வந்தன.

எது எப்படி இருந்தாலும் விருது மிகச்சரியான நபருக்கு மட்டுமே போய் சேரவேண்டும் என்ற காரணத்தால் ஆய்வுபணிகளை துரிதமாக மேற்கொண்டோம் 

காலம் மிக குறுகிய அளவே இருந்த காரணத்தால்
இப்படியாக முடிவு செய்த உடனேயே எங்களுக்கு பல விதமான சிந்த்னைகள்  பலருடைய முகங்கள் வந்து போயின 

இன்றைய மிழ்ச்சூலின் கருத்து வளத்துக்காக களத்தில் நிற்கும் பல முன்னணி எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் வந்து போயின

குறிப்பாக நேரடியாக கருத்துக்களத்தில் பெரியாரின் கருத்துக்களை ம்க்களிடையே கொண்டு செல்லும்  தோழர்கள் பாமரன் வே மதி மாறன் கோவி லெனின் போன்றர்களே முதன்மையாக தோன்றினர்

இதழியல் துறையில் அருள் எழிலன், கார்டீனீஸ்ட் பாலா, கவின் மலர் மற்றும் கல்வி சார்ந்த அரிய கட்டுரைகளை எழுதி வரும் பாரதி தம்பி பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த ப்ரியா தம்பி ஆகியோரும்

அது போல சுற்றுச்சூழலுக்காகவும் தமிகத்தின் இன்றைய ப்ரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் பூவுலகின் நண்பர்கள் இயக்கமும்  அம்பேத்கார் பிறந்த நாளை ஒட்டி தொடர்ந்து ஒரு மாதம் முழுக்க கூட்டம் நடத்தின பனுவல் அமைப்பும் எங்களுக்கு முதன்மையாக நினைவில் அழுத்தமாக வந்து நின்றது

கட்சி இயக்கங்களை தாண்டி தனி நபராக பசுமை நடை இயக்கம் என்ற பெயரில்  மதுரையில் அது சார்ந்த மிகபெரிய விழிப்புணர்வை உண்டாக்கி வரும் தோழர் அ,.முத்துக்கிருஷ்ணன்

பாராளுமன்றத்தில் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்த திமுக எம்பி திருச்சி சிவா அவர்களின் பெயரும் எங்கள் விவாத்த்தில் எடுத்துக்கொள்ளப்ப்ட்ட்து

படைப்பிலக்கிய துறையில்
ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம் .ரெட் டீ ஆகிய நூல்களை தமிழுக்கு கொண்டு வந்த்வரும் மிளிர்கல் ஆசிரியருமான
இரா. முருகவேள் ,காடோடி நாவல் மற்றும் சூழலியல் சார்ந்த நவீன சிந்னையாளர் கவிஞர் நக்கீரன்  ஆகீயோரும்

அது போல திரைப்படத்துறையில் யாருமே செய்ய முடியாத சாதனைகளைசெய்த இரு இயக்குனர்களும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டனர் .

ஒருவர் ஜீவா திரைப்படம் மூலம் கிரிக்கட் விளையாட்டுத்துறையில் நடக்கும் ஊழ்ல்களையும் சமூக பின்னடைவுகளையும் சித்தரித்த இயக்குனர் சுசீந்த்ரன்

இரண்டாமவர் தலித்  பாத்திரத்தை மைய பாத்திரமாக்கி சென்னை வாழ் தலித்துகளின் வாழ்வை படைப்பாக மாற்றி காண்பித்த மெட்றாஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்

இவர்களோடு 

மற்றும் கல்வித்துறையின் அவலங்களை சித்தரித்த இயக்குனர் ராம்
முண்டாசுப்பட்டி படம் மூலம் மூடநம்பிக்கைகளை கேலி செய்த இன்னொரு ராம் ஆகியோரும் தேர்வு நிலையில் இருந்தனர்

அதே போல மாற்று ஊடகங்களான இறுதியாக குறும் படம் மற்றும் ஆவணப்படத்துறைகளில்  மாற்று சிந்த்னைகளுக்காக போராடும் காஞ்சனை சீனிவாசன் மற்றும் ஆர் பி அமுதன் ஆகியோரையும் கணக்கிலெடுத்துக்கொண்டோம்

இவர்களில் யாரை  தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசித்த போது அனைவரது பணிகளுமே சிறந்த பணி போற்ற தக்க பணி என்பதால் தவிர்க்க முடியாமல் சில விதிகளை தேர்வில் மேற்கொள்ள வேண்டியதாகிப்போனது

முதல் முறை இவ்விருது குழுவாக இல்லமால் தனி நபருக்கு அவர் தம் தன்னலம்ற்ற தொண்டுக்கு ஊக்கமளிப்பதாய் அமைய வேண்டும் என்ற முடிவு செய்த காரணத்தால் பூவுலகின் நண்பர்கள் உள்ளீட்ட இயக்க செயல்பாடுகளை கடந்து விருதுக்கு தேர்வு செய்ய முதல்கட்டமாய் முடிவு செய்தோம்

இரண்டவாது சுற்றில் அரசியல் மற்றும் இயக்கங்கள் சார்ந்து ஏற்கனவே பிரபலமானவர்களையும் , மூன்றாவது சுற்ரில் ஏற்கனவே அங்கீகாரமும் க்வனமும்  பெற்றிருந்த காரணத்தால் திரைப்படத்துறையினரையும் கடந்து எஞ்சியவர்களை ஆலோசித்த போது

எழுத்து இதழியல் மற்றும்  ஆவணப்படத்துறை சார்ந்தவர்களே எஞ்சினர்

அவர்களில் நிறுவனம் சார்ந்து மற்றும் ஏற்கனவே இத்துறைக்காக அங்கீகாரம் மற்றும்  விருதுகளை வாங்கியவர்களை தவிர்த்து அவர்களது பங்களிப்புகளை வைத்து பார்க்கும் போது


இறுதியாக நம் தேர்வுக்குழுவின் மூலம் ஏக மனதாக தேர்வுக்குள்ளானவர்

நம் ஆவணப்பட இயக்குனர்

ஆர் பி அமுதன் அவர்களே

தன்னலமற்ற பணி. தனித்துவம் , வெறுமனே படங்கள் எடுப்பதை கடந்த தீவிரமான மக்கள் அரசியல் ஈடுபாடு , ஈழப்ரச்னை  சூழலியல் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைப்பது ஈடுபடுவது,
ஆவண்ப்படத்தை இயக்கமாக மக்கல் முன்னே கொண்டு செல்லும் தன் முனைப்பு

வருமானமற்ற முழு நேர உழைப்பு

ஒட்டு மொத்த வாழ்வையும் மக்கள் பணிக்கான களமாக மாற்றிக்கொண்ட பெருந்தன்மை
ஆகியவற்றின் காரணமாக  இவ்விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்படுகிறது

சில நிர்வாக செயல்பாடுகளுக்காகவும் இணையத்தில் போதிய வரவேற்பின்மை குறுகிய காலம் காரண்மாகவும் அறிவிக்கப்ப்ட்ட இறுதி தேதிக்கு சற்று முன்னதாக தேர்வாளரை அறிவிக்க வேண்டிய நிர்பந்தமும் சூழலும் ஏற்பட்டமைக்கு வருந்துகிறோம்

வரும் ஆண்டுகளில் இது போன்ற குறைகள் இல்லாமல் நிகழ்வை ஒருங்கு செய்ய பிரயத்தனப்படுவோம்

இந்த விழாவுக்காக பல நண்பர்கள் ஒத்துழைத்த்னர் . பெரியார் சாக்ரடீஸ் குடும்பத்தார், அவரது இளைய சகோதரர் பிரின்ஸ் என்னாரெஸ் ,சிறு உதவியானாலும் கடைசி நேரத்தில் உதவி செய்த ஸ்ரீ பதி பத்மநாபா குழுவில் இடம் வழ்ங்கியதோடு அல்லாமல் விருது குழுவோடு த்ன்னை இணைத்துக்கொண்ட வேடியப்பன் ஆகீயோருக்கு விருது குழு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது

அடுத்த வருடம் அனேகம் பெரியார் சாக்ரடீஸ் நினைவு அறக்கடளை மூலமாக விழா நிகழ்த்த்ப்படும்

நன்றி
பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது விழாக்குழு

      



     




No comments:

Post a Comment