கடந்த ஆண்டு மே 12ம் நாளில் சாலை விபத்தில் மறைந்த ஊடகவியலாளரும்
கருத்து போராளியுமான் பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஊடகம்
மற்றும் பண்பாட்டு துறைகளில் பெரியாரின் பல்வேறுபட்ட
கருத்து நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர் ஒருவருக்கு பெரியார் சாக்ரடீஸ்
நினைவு விருது வழங்க பெரியார் சாக்ரடீஸ் நினைவு விழாக்குழுவினரால் முடிவு செய்யப்பட்டு
பலரும் பரிந்துரைக்கும்படி முக நூல் மற்றும் இணையத்தில் கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது.
அதன் விளைவாக பலரும் செய்த பரிந்துரைகளின் படியும் குழுவின் ஆலோசனை மற்றும் இறுதி முடிவுகளின்
படி 2015ம் ஆண்டுக்கான
பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது
ஆவணப்பட இயக்குனர் .ஆர்.பி,அமுதன் அவர்களுக்கு
வழங்கப்படுகிறது இவ்விருது பெரியார் சாக்ரடீஸ் முதலாம் நினைவு தினமான மே 12 செவ்வாய் மாலை, மாலை 6 மணிக்குகே.கே. நகர்,எண்.5,முனுசாமி
சாலை,டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில்முன்னாள்
அமைச்சர் பரிதி இளம் வழுதி, இயக்குனர் தங்கர்பச்சான் ஆகியோர் முன்னிலையில் வழங்கி
கவுரவிக்கப்பட உள்ளது. ஊடகத்துறை சார்ந்த நிகழ்வென்பதால் நண்பர்கள் அனைவரும் விழாவில்
கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
பெரியார் சாக்ரடீஸ் நினைவு
விருதுக்குழு
டாக்டர்.
நாச்சி முத்து
, எழுத்தாளர்,அஜயன் பாலா
No comments:
Post a Comment