Sunday, July 23, 2017

2017 விருதாளர்கள் வாழ்க்கை வரலாறு

1.திவ்யா பாரதி (ஆவணப்பட இயக்குனர்) – சுய குறிப்பு :



விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வயது 24, .தாயார்.ஜெயபாரதி  தந்தை  கர்ணன் இருவரும் பஞ்சுமில் தொழிலாளர்கள் . சிறு வயது  கம்யூனிஸ் இயக்கத்துடனான ஈடுபாடுகொண்டு மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு கழகத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கான களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி ஊடக துறை மாணவி. தொடர்ந்து மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். கல்லூரி காலங்களில் தொடர்ந்து சமூக மாற்றங்களுக்கான போராட்டங்களில் கலந்துகொண்டவர்.

தலித் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான,  போராட்டம், கவுரவ கொலைக்கு  எதிரான மாணவர் போராட்டம்,  தலித் மாணவர் அரசு விடுதிகளை மேம்படுத்தக் கோரி தொடர் போராட்டம், ஆகியவற்றுடன் வினோதா வித்யா  ஆகிய இளம் பெண்கள் மீதான் ஆசிட் வீச்சுகளூக்கு எதிரான போராட்டம், என மதுரையின் மிக முக்கியமான அரசியல் போராட்டங்களில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது   இதன் காரண்மாக ஆனந்த விகடன் பத்திரிக்கையின் 2013ஆம் ஆண்டின் Top 10 நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் முதல் நபராக இடம் பெற்றார்..

தொடர்ந்து, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் அவலங்களை , வலிகளை , வாழ்வியலை பதிய வைக்கும் வகையில் கக்கூஸ் எனும் ஆவணப்படத்தை இயக்கி இந்த ஆண்டு வெளியிட்டு சமூகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியவர். தொடர்ந்து பல்வேறு தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருவதே இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தக்கூடியது.

  
2.  ஜெயராணி (எழுத்தாளர்) - சுய குறிப்பு


திண்டுக்கல் மாவட்டம் அழகன்பட்டி என்ற கிராமத்தில் மீனா – மயில்வாகனன் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக 28.04.1978 அன்று பிறந்தார். மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலையும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் முதுகலையும் பயின்றார். கடந்த 15 ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றி வரும் ஜெயராணி தமிழின் முன்னணி வெகுஜன இதழ்களான ஆனந்தவிகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளில் பணிபுரிந்த போதும் இவரது எழுத்துகள் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பாடுகளையே பதிவு செய்தன. சாதி எதிர்ப்பு, சிறுபான்மையினர் நலன், பாலின சமத்துவம்,குழந்தைகள் உரிமை சார்ந்து நூற்றுக்கணக்கான செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 
தலித் முரசு இதழில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டும் ’ஜாதியற்றவளின் குரல்’ என்ற தலைப்பில் தொகுப்பாக கடந்த ஜனவரி 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புகைப்படக் கலைஞர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என  பல்வேறு தளங்களிலும் இயங்கி வருகிறார்.
இயக்குனர் ரஞ்சித் உருவாக்கத்தில் ஜெய்பீம் மன்றம் மூலம் மேடையேற்றப்பட்ட  கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் அவலங்களைச் சொல்லும்  மஞ்சள் நாடகத்தின் திரைக்கதை பிரதியை உருவாக்கியது  சமூக மாற்றத்திற்கான  இவரது  சீரிய  பங்களிப்பு 




No comments:

Post a Comment